Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து வழக்கு : இன்று மாலையில் தீர்ப்பு

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (14:01 IST)
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  
அதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.  
 
இதற்கு ஏற்றார் போல், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று தற்போது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு மேல் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். 
 
அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது தேர்தல் ரத்துக்கு எதிராக வேட்பாளர்கள் இதில் அதிமுக ஏசி சண்முகம்,  , சுயேட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு  தீர்ப்பளிக்கின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments