Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி எனப் பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா ? – ராகுல் பேச்சால் சர்ச்சை !

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (13:57 IST)
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி எனப் பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘ ‘மோடி எனப் பெயர்  வைத்தவர்கள் எல்லாம் ஏன் திருடர்களாக இருக்கிறார்கள், லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி… இன்னும் எத்தனை மோடிகள் வரப்போகிறார்களோ’ எனக் கேட்டார்.

இது குறித்து பதிலளித்துள்ள நரேந்திர மோடி ‘ காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் நான் சார்ந்திருக்கும் சமூகத்தை திருடர்கள் எனக் கூறி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள். என்னைக் குற்றம் சாட்டுவது போல பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே இழிவுபடுத்துகிறார்கள். வாரிசு அரசியல்வாதியான ராகுல் முதலில் என்னைத் திருடர் என்றார். பின்பு என் சமூகத்தையே திருடர் என்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து நான் வந்ததால் நான் இவ்வாறு புண்படுத்தப்படுகிறேன். ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் உங்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணித்ததை விட முன்னரே உருவானது காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யுமா?

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments