சின்னம் ஒட்டும் பணி தொடக்கம் – கலைகட்டும் தேர்தல் களம் !

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:31 IST)
இன்னும் 8 நாட்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னம் ஒட்டும் பணித் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்கட்டமாக நாளை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதையடுத்து ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

கடந்த மாதமே வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதையடுத்து இப்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் இந்த பணிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

சின்னம் ஒட்டும் பணிகள் நிறைவடைந்ததும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அவை அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments