Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினர் ஒத்துழைப்பு தருவதில்லை : தேமுதிக புலம்பல்

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (14:01 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் மெகாகூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் தேமுதிகவினருக்கு போதுமான ஒத்துழைப்பு தருவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குக் காட்டுக் அக்கறையைக்கூட வட சென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்குக் காட்டுவதில்லை என தேமுதிகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
தேர்தல் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று தேமுதிகவினர் பெருதும் குறைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும், ஈபிஎஸ் பக்கம் ஒரு அணியினரும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவினர் அதிக அக்கரை காட்டாமல் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்குக் கவனம் செலுத்திவருவதாகவும் தேமுதிகவினர் தேர்தல் பார்வை குறித்து அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments