தேமுதிக சார்பில் விருப்ப மனு..! தொடங்கி வைத்த பிரேமலதா..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (17:10 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தேமுதிக சார்பில் இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
மக்களவை தேர்தலில் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது.
 
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. கூட்டணி குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்..! தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு..!!
 
இந்த நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்களாக விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, கழக நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments