வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டி.! தாமரை மலர்ந்தே தீரும்.! ஏ.சி சண்முகம்.!!

Senthil Velan
சனி, 10 பிப்ரவரி 2024 (12:57 IST)
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
அதேபோல் பாஜகவும், அதிமுகவும் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜக காய் நகர்த்தி வருகிறது.
 
இதனிடையே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளிடம் பேசிய புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்.

ALSO READ: மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் தேவை.! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

வேலூர் தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கடந்த ஆறு மாதங்களாக வேலூர் தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றும் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments