Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு..! ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல்.!!

Senthil Velan
திங்கள், 25 மார்ச் 2024 (13:02 IST)
ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். 

முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ALSO READ: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்கப்படுமா..? நாளை விசாரணை..!!
 
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments