Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் விதிமீறல்.! எம்.எல்.ஏ உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு..!!

Senthil Velan
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (17:33 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. 
 
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில்  அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு.! சிபிஐக்கு மாற்றப்படுமா..? டிஜிபியிடம் பெற்றோர் மனு..!
 
இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

அடுத்த கட்டுரையில்