Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுபறியில் தொகுதிப் பங்கீடு..! நேரடியாக களத்தில் இறங்கிய மு.க ஸ்டாலின்..!!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (12:35 IST)
திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
திமுக கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக உடன் தொகுதி உடன்பாடு இன்னும் ட்டப்படவில்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ALSO READ: அதிமுக தேமுதிக கூட்டணி முடிவுக்கு வருமா..? நாளை 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!!

இந்த ஆலோசனையில் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் பாலியல் வழக்கில் சிக்க வைப்பேன்: கணவனை மிரட்டிய மனைவி..!

இவரே குண்டு வைப்பாரம்.. இவரே எடுப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments