Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுகவுக்கு 1 மக்களவை, 1 மாநிலங்களவை சீட்.? திமுக ஒப்புதல் என தகவல்..!!

Senthil Velan
வியாழன், 7 மார்ச் 2024 (13:06 IST)
மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வருகிறது.
 
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
 
திமுக மதிமுக இடையே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் மதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முதல்வர் ஆலோசனை:
 
காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து திமுக தொகுதி பங்கிட்டு குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்கவும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: தமிழகத்தை குறி வைக்கும் பிரதமர் மோடி.! மார்ச் 22-ல் மீண்டும் வருகை..!!

திமுக மதிமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments