Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரி தொகுதி கிடையாதா? அதிருப்தியுடன் கருத்து தெரிவித்த ஆ ராசா..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (13:03 IST)
நீலகிரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா இந்த முறை போட்டியிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆ ராசா,  நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வேன் என்றும் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆ ராசா போட்டியிட்டு வென்றார் என்பதும் 2009 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்ற போது மத்திய அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட ஆ ராசாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்பட்டு வருகிறது

குறிப்பாக சமீபத்தில் அவர் ராமர் குறித்து பேசிய பேச்சு பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளே கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த முறை ஆ ராசா போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments