Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு எதிர்ப்பு கரூர் அருகே பரபரப்பு

Advertiesment
Senthil Balaji
, ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:56 IST)
கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியை, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பெற்றதில் இருந்தே திமுக வினரிடையே பெரும் அதிர்ப்தி ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது அதே கட்சியின் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவரது உறவினரான நிலையில், ஆங்காங்கே மக்களவை தேர்தலில் வாக்குகள் சேகரிக்கும் போதே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோமூர் பகுதியில் வாக்குகள் சேகரிக்கும் போது பொதுமக்கள் செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்நிலையில் காவல்துறையின் பாதுகாப்போடும், ராணுவ பாதுகாப்போடும் தான் இனி செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் வாக்குகள் சேகரிக்க முடியும் என்கின்றனர் அதே கட்சி நிர்வாகிகள். மேலும், வாங்கல், சோமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நீங்கள் ( செந்தில் பாலாஜி ) அமைச்சராக இருக்கும் போது என்ன நல்ல திட்டங்கள் செய்தீர்கள் என்று முழக்கங்களுமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை விளாசிய பிரபல நடிகை