Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சின்னம் மட்டும் மங்கலாக உள்ளது – சீமான் ஆவேசம் !

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (15:03 IST)
தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் மட்டும் மங்கலாகப் பொறிக்கப்பட்டுள்ளது என சீமான் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். திமுக, அதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக என அனைத்துக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துவருகிறார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மாலதியை ஆதரித்து சீமான் அவுரித் திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர் ‘ வாக்குச்செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து சின்னங்களும் பளிச்சென இருக்கின்றன, ஆனால் நம் சின்னம் மட்டும் மங்கலாகவும் சின்னதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த இடத்தைக் காலியாக அப்படியே விட்டிருக்கலாமே.. ’ என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments