Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டாள்கள் ஆறுகளை இணைப்பதாக பேசுகிறார்கள் – பாஜக & ரஜினியைக் கலாய்த்த சீமான் !

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:23 IST)
பாஜகவின் நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனமான செயல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று பேசிய சீமான் ‘நதிகளை இணைப்பதாக சில முட்டாள்கள் பேசிக்கொண்டு கோடிகளை ஒதுக்கப்போவதாக சொல்லியுள்ளனர். ஏரி, குளம், கிணறு மற்றும் கம்மாயை நமது முன்னோர்கள் வெட்டினார்கள். ஆற்றை நாம் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பிச்சை. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள் ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக பாஜகவின் நதிநீர் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை மூளை இல்லாத நடிகர் என்றும் மோடிதான் அவரது இயக்குனர் என்றும் சீமான் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments