Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் என்றால் என்னவென்று தெரியுமா ? – மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி !

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:59 IST)
ப சிதம்பரதை ஜாமீனில் வெளியில் இருப்பவர் என்று கூறிய மோடிக்கு ஜாமீன் என்பது விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுவது என சிதம்பரம் பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்திற்கு நேற்று 4 ஆவது முறையாகப் பிரச்சாரத்திற்கு வந்தார் பிரதமர் மோடி. கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மோடி பேசும்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் ’காங்கிரஸ் கட்சியின் தேர்தல அறிக்கையைப் படித்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த அறிக்கையை தயாரித்த அமைச்சர் ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஜாமீனில் வெளியே இருப்பவர். சொந்த இருப்பை காட்டிக்கொள்வதற்கே சிலருக்கு ஜாமீன் தேவைப்படுகிறது’ எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்துள்ள சிதம்பரம் ‘மோடி அரசில் ஒருவர் குற்றவாளியாக முதலில் அறிவிக்கப்படுவார். பின்னர்தான் அவர் மீதான் விசாரணை நடத்தப்படும். மோடிக்கு சட்டங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தனது நண்பரான அருண் ஜெட்லியிடம் கேட்டுக்கொள்ளலாம். ஜாமீன் என்பது விதிமுறைகளின் படி வழங்கப்படுவது. சிறை என்பது விதிவிலக்ககாக வழங்கப்படுவது, முதலில் அதைப் புரிந்துகொள்ளுங்கள்.’ எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments