Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகிறது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் !

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (10:10 IST)
இன்று முதல் தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகள் தீவிரமாக உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டனர். இந்நிலையில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் இரண்ட்லிலும் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என அறிவித்துள்ளது.

அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி கோவை கொடீசியா வளாகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்க உள்ளது. கமல் தனது சொந்த தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும் கமல் கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களான ஸ்ரீப்ரியா, சினேகன், கமீலாநாசர் ஆகியோரும்  போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

கமல் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடக் கட்சி உறுப்பினர் அல்லாதவரும் விண்னப்பிக்கலாம் என அறிவித்திருந்தார். மேலும் வேட்பாளர் விருப்பமனுப் படிவங்களில் தனித்தொகுதி தவிர்த்து மற்ற பொதுத்தொகுதிகளில் சாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை எனவும் குறிப்பிட்ட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தலில் போட்டியிட 1300க்கும் மேற்பட்டோர் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments