Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட்டை மூட்டையாக வேலூர் சிமெண்ட் குடோனில் சிக்கிய பணம்: முக்கிய புள்ளிக்கு தொடர்பா?

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:59 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகுப்பம் என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் சட்ட விரோதமாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சிமெண்ட் குடோனில் சோதனை நடத்தியதில் அங்கு மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. சுமார் ரூ.9 கோடியில் இருந்து ரூ.15 கோடி வரை சிக்கிய பணத்தின் தொகை இருக்க கூடும் என தகவல் கிடைத்துள்ளது. 
 
மேலும், ஒவ்வொரு மூட்டையிலும் வார்ட் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால், தேர்தல் நேரத்தில் அவை அரசியல் கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வைத்திருக்க கூடும் என தெரிகிறது. மேலும் இந்த பண விவகாரத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது.  
கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்றது, அதே போல் அவர் நடத்தி வரும் கல்லூரியிளும் சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments