Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்துக்கணிப்பு முடிவுகள் – டெட்லைன் விதித்த தேர்தல் ஆணையம் !

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (08:52 IST)
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட ஏப்ரல் 9 ஆம் தேதியே கடைசி நாள் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடுவதில் ஊடகங்கள் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கணவே சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட ஏப்ரல் 9 ஆம் தேதியே கடைசி நாள் என்று தமிழக தேர்தல் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ ‘ முதல் கட்ட பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 9 வரை மட்டுமே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடலாம். அதிலிருந்து மே 19 வரை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments