Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் பிரதமர் ஹெலிகாப்டரை மறித்த போர் விமானங்கள்: பகீர் புகார்!!!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (08:43 IST)
சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தான் சென்ற ஹெலிகாப்டருக்கு துருக்கியின் போர் விமானங்கள் 'தொந்தரவு' கொடுத்ததாக கிரேக்க பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
நேற்று (திங்கட்கிழமை) கிரேக்கத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த துருக்கியின் போர் விமானங்கள், தனது ஹெலிகாப்டரை 'தாழ்ந்து பறக்கும்' நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி, துருக்கியின் செயலை அவர், "அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அலெக்சிஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி ராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள் வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
 
கிரேக்கம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இஜியன் தீவு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments