Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலுக்கு தடை ?– முன்னாள் எம்.எல்.ஏ மனு தள்ளுபடி !

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (09:14 IST)
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் என்பவர் முறைகேடாக சொத்துக் குவிப்பு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரின் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிடத் தடை கேட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசோக் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில் தன் மீதான தகுதி நீக்கம் சரி தானா என்பது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் அசோக் ஆனந்தின் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அசோக் ஆனந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments