Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை - காவல்துறை தீவிர கண்காணிப்பு!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:03 IST)
பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாக்குப்பதிவு மையங்களில் நாளை நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் மொத்தம் உள்ள 31,150 வாக்குப்பதிவு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 
 
மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று 2 ஆயிரம் இடங்களில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதட்டமானவை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments