Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி- திரையிடப்படுகிறது

வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி- திரையிடப்படுகிறது
, வெள்ளி, 19 நவம்பர் 2010 (15:50 IST)
தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை, ஆதாரத்துடன் படமாக்கி வெளியிட்டு அது குறித்த உண்மை உணர்வை உருவாக்கிவரும் இயக்குனர் சோமிதரனின் புதிய படைப்பான ‘வெடித்த நிலைத்தில் வேர்களைத் தேடி’ என்ற வரலாற்று ஆவணப் படம் நாளை சென்னையில் திரையிடப்படுகிறது.
FILE

சிங்கள இனவெறியர்களால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலக எரிப்பை ‘எரியும் நூல்கள்’ என்றும், பிறகு முல்லைத் தீவில் தொன்று தொட்டு தமிழர்கள் வணங்கிவரும் கண்ணகி கோயில் குறித்து ‘முல்லைத் தீவு’ ஆகிய இரண்டு குறும்படங்களை வெளியிட்டவர் சோமிதரன்.

சோமிதரனின் புதிய படைப்பான வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி திரைப்படம் நாளை சென்னை கோடம்பாக்கம் பாலம் அருகிறலுள்ள பெரியார் சாலையில் அமைந்துள்ள எம்.எம்.தியேட்டரில் மாலை 5 மணிக்கு திரையிடப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பான தமிழரைக் காப்போம் (Save Tamils Movement) இயக்கத்தினரால் இந்த குறும்படம் வெளியிடப்படுகிறது.

இது குறித்து தமிழரைக் காப்போம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:

நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமுமமுன்னோக்கி நகர்கின்றது. பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு பதலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வரை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்தபயணித்து கொண்டிருக்கின்றது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்.

60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைசசந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில், இலங்கை தீவில் இயக்கர், நாகர், வேடர் என்ற இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியலஅதிகாரத்தைப் படிப்படியாக இழந்து எப்படி இன்றைய நிலையை அடைந்திருக்கின்றார்களஎன்பதை அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், அதன் மேலவினையாற்றவும் இயலும். மேலும் நிகழ்காலமோ, ‘நாகரிக உலகம்’ என்று சொல்லப்படுமகாலகட்டத்தில் ஒரு இனப்படுகொலையை அனுமதித்து, எந்தச் சலனமும் இன்றி கடந்துப் பயணித்துக் கொண்டிருக்கும்போது வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதததேவையாகின்றது.

வரலாறே நமது வழிகாட்டி.

வரலாற்றை ஆவணப்படமாக ஆக்கியதேன்?
இன்று தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுந்திருக்கும் புதிஆற்றல்களில் பலரும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ’பயங்கரவாதத்திற்கு எதிராபோர்’ என்ற பெயரில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போர் தீவிரமாநடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இப்போராட்டத்தின் அரசியல் காரணங்களை அறிந்தகொள்ள வேண்டிய தேவை உந்தித் தள்ளியபோது, வரலாற்று நூல்களைப் படிக்கும் பழக்கமஇல்லாத இன்றைய தலைமுறையைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களால் ஈழத் தமிழரின் விடுதலவரலாற்றை விரைவாகத் தெரிந்துகொள்வதற்கென்று காட்சி ஊடகத்தில் ஒரு பதிவு இல்லஎன்பதை உணர முடிந்தது.

இனப்படுகொலைப் போரும், அது ஏற்படுத்திய பாதிப்பும் இதனதேவையை மேலும் வலியுறுத்தியது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ‘வரலாற்றைச் சுமையாஎண்ணுவதும், தேவையற்ற ஒன்றாக கருதுவதும்’ இளைஞர்களின் பொதுக் கருத்தியலாஇருக்கின்றது. இது புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைய தலைமுறைக்கும் பொருந்துமஎன்றே கருதுகிறோம். சாரமாக, இன்றைய நெருக்கடியானதொரு கணத்தில், இளைய தலைமுறையைபபோராட்டத்தில் உள்வாங்குவதற்குள்ளத் தடைகளைக் தகர்ப்பதற்கு வரலாற்றைக் காட்சி வடிவில் ஆவணப்படுத்துவது உதவும் என்ற நோக்கத்துடனே இந்த படமஉருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம் குறித்து:

webdunia
FILE
இந்தப் படத்தை திரு.சோமிதரன் அவர்கள் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ’எரியுமநினைவுகள்(யாழ் நூலக எரிப்புக் குறித்து)’, ’முல்லைதீவு’ என்று ஈழம் தொடர்பாஇரண்டு ஆவணப்படங்களஉருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், தமிழர்கள் பூர்வகுடிகளாக இலங்கை தீவில் வாழ்ந்த காலம் தொடங்கி, பூர்வகுடித் தமிழர்களிடமிருந்து படிப்படியாக அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டவிதம், 60 ஆண்டுகாலத்திற்குமேலாக நடந்துவரும் தமிழின அழிப்பு, ஒப்பந்தங்களுமஏமாற்றங்களும், தமிழர்களின் அறவழி மற்றும் ஆயுதவழிப் போராட்டங்களுக்கான தேவமற்றும் கடந்து வந்தப் பாதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் குறிப்பாக தமிழீழககோரிக்கையின் வளர்ச்சியும் அதன் வரலாற்று தேவையும் இந்த ஆவணப்படத்திலவிளக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிவராத சில அரிய நேர்காணல்களும் இப்படத்திலஇடம்பெற்றுள்ளன. இப்படத்தின் நீளம் சுமார் 2.45 மணி நேரம்.

இப்படம் நுணுக்கமான ஆய்வு நோக்கில் அல்லாமல் ஒரு வரிசைப்படுத்தப்பட்ட ஆண்டநிகழ்வுகளின் தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உருவாக்க ஏறத்தாஒராண்டு ஆனது.

இப்படத்தைக் காண்பது என்பது வரலாற்று நூல்களைப் படிப்பதைவிட சற்றே விரைவாமற்றும் எளிமையான அனுபவமாக இருக்குமேயன்றி விறுவிறுப்பான திரைப்படத்தைப் போலஇருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈழ விடுதலைப் போரட்டத்தின் வரலாறே, இன்று நம் கையில் இருக்கும் ஆற்றல் வாய்ந்கருவி என்ற காரணத்தினால், இந்த வரலாற்று ஆவணத்தை இத்தலைமுறையைச் சேர்ந்இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை உரிமையோடதெரிவித்துக்கொள்கிறோம்.

வரலாறநம்மை விடுதலசெய்யும்”.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil