Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் இருப்பதை போலவே நிஜத்திலும் பறக்கத் துடிக்கும் நடிகை

சினிமாவில் இருப்பதை போலவே நிஜத்திலும் பறக்கத் துடிக்கும் நடிகை
, சனி, 29 ஏப்ரல் 2017 (18:09 IST)
மகளிர் முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்திருக்கும் திருமணமான நடிகை சினிமாவில் தான் நடித்த கதாப்பாத்திரம் போலவே நிஜத்திலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம்.


 


‘காதலையும், தும்மலையும் மறைச்சி வைக்க முடியாது’ என்பார்கள். அந்த லிஸ்ட்டில் நடிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் இந்த கல்யாணமான நடிகைகள் இருக்கிறார்களே… குடும்பத்துக்காக ஆசைகளை மனதில் புதைத்துக் கொண்டாலும், நீறுபூத்த நெருப்பு போல ஒருநாள் பெரும் தீயாகப் பற்றிக்கொள்ளும்.
 
அந்த நிலையில்தான் இருக்கிறார் தமிழ் நடிகரைக் கல்யாணம் செய்துகொண்ட வடநாட்டு நடிகை. மாமனார், கணவர், கொழுந்தன் என மூன்று நடிகர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், டீசண்டான ரோல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் போலவே நிஜத்திலும் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க ஆசைப்படுகிறாராம். அதன் வெளிப்பாடுதான் மேடையில் தன் கணவரையே கலாய்த்துப் பேசியது என்கிறார்கள். இது எங்கபோய் முடியப்போகுதோ…

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி உருவானது எப்படி? யார் இந்த சிவகாமி?