கடைத்தெரு படத்தில் நடித்த நடிகை சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்நிலையில் எங்கு பார்ட்டி என்றாலும் பளபள உடையில் ஆஜராகிவிடுகிறார். அவரது காஸ்ட்யூமின் சிக்கனத்துக்காகவே அவரை பார்ட்டிக்கு விரும்பி அழைக்கிறார்கள்.
பார்ட்டியில் அவர் போடும் ஆட்டத்துக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எல்லாம் முடிந்து மறுநாள் வீங்கிய கண்களுடன் படப்பிடிப்புக்கு வருகிறவரை அழகாகக் காட்ட கேமராமேன்கள்தான் சிரமப்படுகிறார்கள்.
இப்படியே போனால் சீக்கிரமே பாப்பா பீப்பாய் ஆயிடும் என்கிறார்கள்.