Publish Date: Fri, 30 Jun 2017 (20:44 IST)
Updated Date: Fri, 30 Jun 2017 (20:48 IST)
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெற்றிப்படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக உள்ளார். தற்போது ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வந்தாலும் இன்னும் மூன்று படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அனிருத்தின் உறவினரும் அவரது இசையில் வெளியான 'ரம்' படத்தின் நாயகனுமான ரிஷிகேஷுடன் மஞ்சிமா காதல் கொண்டுள்ளதாகவும் விரைவில் அனிருத் வீட்டிற்கு அவர் மருமகள் ஆகப்போவதாகவும் இணையதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து மஞ்சிமாமோகன் தரப்பினர் கூறியபோது, 'ரிஷிகேஷூடன் மஞ்சிமா பழகுவது உண்மைதான், ஆனால் அந்த பழக்கம் நட்புரீதியிலானது என்றும் அனிருத் வீட்டிற்கு அவர் மருமகளாக போகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால் விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறது