Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படியே போனால் தாக்குப் பிடிக்குமா தமிழ் சினிமா?

இப்படியே போனால் தாக்குப் பிடிக்குமா தமிழ் சினிமா?
, திங்கள், 3 நவம்பர் 2014 (10:59 IST)
படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ. நடிகர்களின் சம்பளம் மட்டும் படத்துக்குப் படம் உயர்கிறது. நடிகர்களின் சம்பளம் என்றால் சேனாதிபதியையும், தலயையுமே குறிப்பிடுகின்றனர். ஆனால் இவர்களைவிட சம்பள விஷயத்தில் உயர்ந்து நிற்கிறார் பிரகாச ஹீரோ.
 
காத்திருந்து இரையை தூக்குற கழுகுடா என்று பேசி நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 30 கோடி என்கின்றன தகவல்கள். இந்த சம்பளத்தை சொல்லிதான் படத்தை தயாரித்து இயக்கியவர் பிரகாச ஹீரோவை மடக்கினாராம். இந்த கொழுத்த சம்பளத்துக்குப் பிறகு பதினெட்டு, இருபது என்று ஊசலாடிக் கொண்டிருந்த தனது சம்பளத்தை இருபத்தைந்து கோடியில் பிக்ஸ் செய்திருக்கிறார் நடிகர். 
 
இப்படியேப் போனால் தியேட்டரில் 200 ரூபாய்க்கு விற்கிற டிக்கெட்டை ஆயிரம் இரண்டாயிரத்துக்கு விற்க வேண்டி வருமே நாராயணா.
 

Share this Story:

Follow Webdunia tamil