Publish Date: Thu, 17 Aug 2017 (19:03 IST)
Updated Date: Thu, 17 Aug 2017 (19:07 IST)
சந்தன நடிகர் கஷ்டத்தில் இருந்தும், அவரால் வளர்ந்த நண்பர்கள் ஒருவர் கூட உதவவில்லையாம்.
பல நடிகர்களின் படங்கள் ஓடியதே, அதில் சந்தன நடிகர் காமெடியனாக நடித்ததால் தான். ஹீரோ என இன்றைக்கு மார்தட்டி திரியும் பலர், சந்தன நடிகரைக் கொண்டுதான் ஹீரோவாக அறிமுகமானார்கள், நிலைநிறுத்திக் கொண்டார்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று சந்தன நடிகரைக் கண்டுகொள்வதில்லையாம். அவர் நடித்த படம் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. அவரால் பலன் பெற்றவர்கள் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தும், அந்தப் படத்தை வாங்கி வெளியிடவோ, பைனான்ஸ் ரீதியாகவோ உதவ முன்வரவில்லையாம். இதனால், ‘ஊர தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி’ என பாட்டு பாடி அழுது கொண்டிருக்கிறாராம் சந்தன நடிகர்.