Publish Date: Wed, 15 Mar 2017 (14:16 IST)
Updated Date: Wed, 15 Mar 2017 (14:41 IST)
காமெடியனாக இருந்த சந்தன நடிகர், இன்றைக்கு ஹீரோவாக வளர்ந்து பெரிய அளவில் இருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலகட்டங்களில், இங்குள்ள ஒரு நடிகை கூட அவருக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை.
இதனால், மும்பை நடிகையை அழைத்துவந்த சந்தனம், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டார். இப்போது அவரின் வளர்ச்சியைப் பார்த்து கோடம்பாக்கமே அரண்டு போய் நிற்கிறது.
ஆனால், அவர் அழைத்துவந்த மும்பை நடிகையோ வாய்ப்பில்லாமல் தவிக்கிறார். எனவே, சந்தனத்துடன் மறுபடி ஜோடி போட்டால் தன் மார்க்கெட் தலைதூக்கும் என நினைக்கிறார். இதை சந்தனத்துக்கும் தெரிவித்தாராம் நடிகை. இரண்டு படங்களில் நடித்தபோதே கிசுகிசு வந்ததால், இனிமேலும் சேர்ந்து நடிக்க முடியாது என தெரிவித்து விட்டாராம் சந்தனம்.