Publish Date: Mon, 11 Sep 2017 (18:46 IST)
Updated Date: Mon, 11 Sep 2017 (18:52 IST)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம் தாடி இயக்குநர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி அது. 100 நாட்கள் முடிய இன்னும் 3 வாரங்களே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்திர நடிகைக்கு, ஏகப்பட்ட புகழ் கிடைத்திருக்கிறது. அதன்மூலம் புதிதாக நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.
அதனால், வளர்ந்துவரும் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தாடி இயக்குநரை சேனலே அழைத்தும், அவர் மறுத்துவிட்டாராம். அவர் போயிருந்தா ரைமிங்கா பேசி நிகழ்ச்சியே களைகட்டியிருக்கும் என்கிறார்கள்.