Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகைப்புயல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

வைகைப்புயல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
, செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:53 IST)
பிரமாண்ட இயக்குநர், வைகைப்புயல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.


 


பிரமாண்ட இயக்குநர் தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார் வைகைப்புயல். மன்னரின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்தப் படம், காமெடி வகையைச் சேர்ந்தது. அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதால், அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.ஆனால், படம் முழுதாக எடுக்கப்படுமா இல்லை அப்படியே நின்றுவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், வைகைப்புயல் கொடுக்கும் டார்ச்சர் கொஞ்ச நஞ்சமில்லையாம். ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராதவர், வரும்போதெல்லாம் அதை மாற்று, இதை மாற்று என்று கட்டளை போடுகிறாராம்.

இதனால் கடுப்பான பிரமாண்ட இயக்குநர், படத்தை ட்ராப் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர். வைகைப்புயலுக்கு கொடுத்திருக்கும் சம்பளத்தை திருப்பித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்னிலியோனுக்கு போட்டியாக குதித்த மற்றுமொரு ஆபாச நடிகை