Publish Date: Wed, 21 Jun 2017 (18:49 IST)
Updated Date: Wed, 21 Jun 2017 (18:51 IST)
தமிழில் எடுத்த படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்தால், கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம் வில்லி நடிகை.
ஒல்லி நடிகரின் நடிப்பில், இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இதில், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகை, வில்லியாக நடித்துள்ளார். 17 வருடங்களுக்கு முன்பு ஹீரோயினாக தமிழில் ஒரே ஒரு படம் நடித்தவர் இந்த நடிகை. இந்தப் படம், அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது.
பாலிவுட் நடிகை நடித்திருப்பதால், தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ஹிந்தியிலும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். ‘தமிழில் நடிக்க மட்டும்தானே சம்பளம் கொடுத்தீர்கள். ஹிந்தியில் ரிலீஸ் செய்தால் எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்கிறாராம் நடிகை. ‘அதெப்படி தரமுடியும்? நீங்கள் ஒருமுறை தானே நடித்தீர்கள்?’ என்று கேட்கிறாராம் நடிகரும், தயாரிப்பாளருமான ஒல்லி நடிகர். பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகிறது.