Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோ புகாரின் விளைவு!! ஏர்டெல், வோடோபோன், ஐடியாவிற்கு ரூ.3050 கோடி அபராதம்

Advertiesment
ஜியோ புகாரின் விளைவு!! ஏர்டெல், வோடோபோன், ஐடியாவிற்கு ரூ.3050 கோடி அபராதம்
, சனி, 22 அக்டோபர் 2016 (12:40 IST)
ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு, சரிவர இணைப்பு கொடுக்காதலால் ரூ.3050 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜியோவில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு, சரிவர இணைப்பு கொடுக்காதலால், அதிகமான 'கால் ட்ராப்'-ஐ சந்தித்தது ஜியோ. இந்த விவகாரத்தை ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயிடம் எடுத்துச் சென்றது. 
 
புகாரை விசாரித்த ட்ராய், இம்மூன்று நிறுவனங்களும் வேண்டுமென்றே, ஜியோ சிம்மில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்தது.
 
எனவே, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளது. 
 
பொதுவாக இதுபோல், முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் லைசென்சு ரத்து செய்யப்படும். அப்படி செய்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அபராதத்துடன் முடித்துக் கொண்டது ட்ராய்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைது ஆவாரா டிராபிக் ராமசாமி? - முதல்வர் உடல் நலம் குறித்து வதந்தி