Webdunia - Bharat's app for daily news and videos

Install App

130 ரூபாய்க்கு 200 சேனல்கள் கட்டாயம்! – ட்ராய் புதிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (09:34 IST)
ஒவ்வொரு சேனலுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் புதியதொரு திட்டத்தை ட்ராய் அறிவித்துள்ளது.

முன்னதாக டிடிஹெச் மற்றும் கேபிள் டிவிக்களில் சேனல்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலையே ரீசார்ஜ் விலையாக இருந்து வந்தது. டிடிஎச் சேவை நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ், மூவிஸ், கிட்ஸ் என தனியாக பிரத்யேக பேக்குகளை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் ட்ராய் புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி சேவை கட்டணம் 130 ரூபாய் பெறும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவிக்கள் 100 சேனல்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும். அது தவிர்த்து ஒவ்வொரு சேனலுக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை அந்தந்த சேனல்களே அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி சமீப காலமாக தேவையான சேனல்களுக்கு 130 ரூபாய் மட்டுமல்லாமல் கூடுதலாகவே பணம் செலுத்தி வருகின்றனர் மக்கள்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் முதல் புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது ட்ராய். அதன்படி வரிகள் உட்பட 130 ரூபாய்க்கு 200 சேனல்கள் வாடிக்கையாளர்களுக்கு டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக சேனல்களுக்காக பணம் செலுத்துவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments