Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட வாய்ப்பு ’- ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (19:39 IST)
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுக்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அதிவேகமாய் வளர்ச்சி அடைந்துவிட்டது. அதனால் எந்தவொரு வேலையும் மிக எளிதாக செய்துவிட முடியும் யாருடனும் எளிதில் தொடர்பு கொள்ளமுடியும். 
அதேபோல் நெடுவரிசையில் வங்கியில் நின்று பணம் கட்ட, பணம் அனுப்ப ஒருநாள் வேலைக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை. இன்றைக்கு யூபிஐ(up)i மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
 
ஆனால் இப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக பணம் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
ஆர்பிஐ. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எனி டெக்ஸ் என்ற ஆப் உதாரணத்தை காண்பித்து ஒரு வாடிக்கையாளர் பணப்பரிமாற்றத்துக்காக அந்த ஆப்பௌ டவுன்லோடு செய்தால் போதும். அதில் தரப்படும் அனுமதியைக் பெற்று அந்த மொபைலை குறிப்பிட்ட நிறுவனம் தம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதாவது யுனிஃபைடு பேமண்டு இண்டர்ஃப்பேஸ் எனும் யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக எடுத்துவிட  முடியும் என்று தெரிவித்துள்ளது.இதுபோன்ற டிஜிட்டல் ஆப்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments