Publish Date: Tue, 28 Mar 2017 (10:16 IST)
Updated Date: Tue, 28 Mar 2017 (10:18 IST)
ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் மார்ச் 31 முடிவடைய உள்ள நிலையில், இந்தக் கால அவகாசத்தை நீட்டிக்க ஜியோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்சமயம் பயன்படுத்தி வரும் புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு ஜியோ பிரைம் எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, ஆம் தேதிக்குள் ஜியோ பிரைம் திட்டத்தில் ரூ.99 செலுத்தி ஜியோ புத்தாண்டு சலுகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க ஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து ஜியோ சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.