Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் புதிய சேவை அறிமுகம்!

Webdunia
வியாழன், 10 மே 2018 (21:16 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெய்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட பிற முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள போராடி வருகின்றனர்.
 
ஜியோவிற்கு போட்டியாக பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோபோஸ்ட்பெய்ட் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  
 
இதில் சர்வதேச அழைப்புகள் வெறும் 50 பைசாவில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த சேவை வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சேவையில் ரூ.199க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் சேவையில் சிறப்பம்சம் சர்வதேச அழைப்புகளுக்கு குறைந்த கட்டணம்தான்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments