Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த கூகிள் பிக்ஸல்4ஏ! – மன்னிப்பு கேட்ட கூகிள்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:03 IST)
கூகிள் நிறுவனத்தில் புத்தம் புதிய மாடலான பிக்ஸல் 4ஏ மொபைல் விற்பனை தொடங்கி உடனே விற்று தீர்ந்த நிலையில் கூகிள் கஸ்டமர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல் மொபைல்களில் புத்தம் புதிதாக அறிமுகமாகியுள்ள மாடல் பிக்ஸல் 4ஏ. 128 ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைலின் விலை ரூ.29,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் ப்ளாஷ் சேல் மூலமாக நேற்று நள்ளிரவில் விற்பனைக்கு வந்த பிக்ஸல் ஏ மொபைல்கள் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன.

இதனால் பலர் இந்த மாடல் மொபைலை வாங்க முயற்சித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ப்ளாஷ் சேல் விற்பனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கூகிள் நிறுவனம் உடனடியாக மொபைல்கள் விற்று தீர்ந்தது குறித்து மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளது. மேலும் மொபைல் வாங்க முடியாமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள கூகிள் விரைவில் மேலும் சில மொபைல்கள் ப்ளாஷ் சேல் மூலமாக விற்பனைக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments