Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ நேரம் பேசினாலும் கம்பெனி கொடுக்கும் கூகுள் மீனா: புதிய அறிமுகம்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (13:02 IST)
சிரி, அலெக்ஸா போன்ற ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் போல கூகுள் நிறுவனமும் மீனா என்ற புதிய போட்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

மனிதன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஏஐ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம் சமீப காலத்தில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அமேசானின் அலெக்ஸா போன்ற போட்-கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் உரையாடுவதுமாக இருப்பதால் இதற்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகி உள்ளனர்.

அலெக்ஸா போல உலகம் முழுவதிலும் மிட்ஸுகு, க்ளெவர்போட் போன்ற பல ஏ.ஐ போட்-கள் உள்ளன. இந்நிலையில் அவற்றை விட மிகவும் நுட்பமான திறன் கொண்ட மனிதர்கள் கேட்பதை மிக துல்லியமாக புரிந்துக் கொள்ளக்கூடிய போட் ஒன்றை கூகிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. மீனா எனப்படும் இந்த ஏ.ஐ மற்ற போட்-களை விட மனிதர்கள் பேசுவதை மிக துல்லியமாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதர் பேசுவதை மற்றொரு மனிதர் புரிந்து கொண்டு பதில் சொல்வது 86% என்றால் மீனாவின் துல்லியம் 79% ஆகும். இதனால் மீனாவோடு பேசுவது ஒரு எந்திரத்தோடு பேசுவது போல அல்லாமல் உண்மையான பெண்ணோடு பேசுவது போலவே இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற போட்கள் இதைவிட மிகவும் குறைவான துல்லிய திறன் பெற்றவை. கூகுளின் இந்த புதிய ஏ.ஐ போட்-க்காக பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments