Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் திட்டம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (09:12 IST)
இந்தியாவின் மிகப்பெரும் நெட்வொர் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வேகமெடுத்துள்ள சூழலில் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் அதற்கேற்றவாறு தங்கள் சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொறுத்த வரை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. சமீபத்தில் ஜியோ நிறுவனத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் 14,000 கோடி முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ஒப்பந்தம் உறுதியானால் ஏர்டெல்லின் 5 சதவீத பங்குகளை அமேசான் பெறும் என கூறப்படுகிறது.

சமீப காலத்தில் ஆன்லைன் விற்பனை மூலம் இந்தியாவில் முக்கிய இடத்தை பிடித்த அமேசான் தனது ப்ரைம் வீடியோ மூலம் பல வாடிக்கையாளர்களை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments