Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (19:09 IST)
ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன் ஜிகா ஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
இந்த அறிவிப்பு தற்போது பிராட்பேண்ட் சேவையில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவின் அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
 
ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 
 
அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments