Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஜி அலைக்கற்றை ஏலம்: ஜியோ , ஏர்டெல் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி !

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (21:56 IST)
வீடியோ ஸ்டீரீமிங்  மற்றூம் வீடியோ டவுண்லோட் எளியையாக்கும் வகையில் 5ஜி அலைக்கற்றை  அடுத்தகட்ட தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் என்ற நிலையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றது.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ், அதானி டேட்டா ஆகிய நான்கு நிறுவனங்களு இடைய கடும் போட்டி நிலவியது. இதில், 4 நிறுவனங்களும் ரூ.21 ஆயிரத்து 800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன.

இத்ல் ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது.

அதன்படி, இந்த ஏலத்தில் 4 சுற்றுகள் முடிவடைந்த  நிலையில், ஐந்தாவது சுற்று நாளை நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்த 5 ஜி சேவை இன்னும் சில ஓரிரு மாதங்களில் தொடங்கும் எனவும் முதலில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் அடுத்தகட்டமாக பிற நகரங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments