Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 புதிய சாதனை படைத்த விராட் கோலி

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (00:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோலி . 6000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல்-2021 14 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தானை  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கோலி 72 ரன்களும் படிக்கல் 100 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் கோலி புதிய சாதனை படைத்தார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் 6021ரன்கள் எடுத்துள்ளார்.  இதன்மூலம் பெங்களூர் அணியின் கேப்டன்   விராட் கோலி . 6000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 5000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments