Publish Date: Mon, 11 Oct 2021 (10:18 IST)
Updated Date: Mon, 11 Oct 2021 (10:22 IST)
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி ஓவரை ஏன் ரபாடாவுக்குக் கொடுக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளஸ்சிஸ்ஒரு ரன்னில் அவுட்டாகி போதிலும் ருத்ராஜ் மற்றும் உத்தப்பா மிக அபாரமாக விளையாடினர். கடைசியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து தான் ஒரு ஃபினிஷர் என்பதை உறுதி செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் ரபாடாவை பயன்படுத்தாமல் ஏன் பண்ட் டாம் கரண்ணை பயன்படுத்தினார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏனென்றால் தோனியை சில போட்டிகளில் நிற்கவைத்து சில போட்டிகளை வென்றுள்ளார் ரபாடா. இதுகுறித்து பேசியுள்ள பண்ட் டாம், அதுவரை சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனால் அவருக்கு கொடுத்தோம். எங்கள் ரன்கள் வெற்றி பெற போதுமானவைதான். ஆனால் சென்னை அணி அதிரடியான தொடக்கத்தை பெற்றனர். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.