Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியம் பட்டம் வென்ற சென்னை அணிக்கு எத்தனை கோடி பரிசு?

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (07:22 IST)
சாம்பியம் பட்டம் வென்ற சென்னை அணிக்கு எத்தனை கோடி பரிசு?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான சென்னை அணிக்கு ரூபாய் 20 கோடி நேற்று பரிசளிக்கப்பட்டது. 
 
ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
இந்த நிலையில் வெற்றி பெற்று சாம்பியன் அணியான சென்னை அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்தார்
 
நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று 20 கோடி பரிசுத் தொகையை அளிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 12.5 கோடி பரிசு வழங்கப்பட்டது என்பதும் இந்த இரண்டு பரிசுகளையும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments