Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ஒத்திவைப்பா? – பிசிசிஐ ஆலோசனை!

Advertiesment
IPL
, செவ்வாய், 4 மே 2021 (09:08 IST)
ஐபிஎல்லில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாளைய ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக மகாராஷ்டிராவிலேயே நடத்தி விட மகாராஷ்டிரா அரசின் அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நாளைய சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை… ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி!