Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணிக்கு மேலும் ஒரு இழப்பு… ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்?

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:19 IST)
எஸ் கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் 2020 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. முன்னதாக அமீரகம் செல்வதற்கு முன்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். இப்போது துபாய்க்கு சென்று அங்கு தனிமைப்படுத்தல் காலம் முடிந்து விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் சி எஸ் கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே சி எஸ் கே வின் துணைக் கேப்டன் ரெய்னா தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments