Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்: ஐதராபாத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை

Advertiesment
ஐபிஎல்: ஐதராபாத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை
, திங்கள், 18 மே 2015 (10:20 IST)
நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி.
8 ஆவது ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே ஐதராபாத் வீரர்கள் மும்பையின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறினர். இறுதியில் ஐதராபாத் அணி பெறும் 113 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
 
இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது மும்பை அணி. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சைமன்ஸ் மற்றும் பார்த்தீவ் பட்டேல் பொறுப்பாக ஆடினார். எனினும் சைமன்ஸ் 48 ரன்களில் வெளியேறினார். இறுதியில் மும்பை அணி 13.5 வது ஓவர்களில் வெற்றி கனியை ருசித்தது. இதனால் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

Share this Story:

Follow Webdunia tamil