ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷா-வுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் அஜித் சண்டிலா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகமீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ரஞ்சி கிரிக்கெட் வீரரான ஹிகென் ஷா, சூதாட்டம் தொடர்பாக பிற வீரர்களை அணுகியதாக புகார் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடந்து, இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இதை உறுதி செய்தது. பின்னர் தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ரஞ்சி கிரிக்கெட் வீரரான ஹிகென் ஷா-வுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.