Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்: சென்னையை வென்று பைனலுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல்: சென்னையை வென்று பைனலுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்
, புதன், 20 மே 2015 (09:02 IST)
நேற்று நடந்த பிளே ஆப் சுற்றில் சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது மும்மை இந்தியன்ஸ் அணி.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்மை அணியின் சைமன்ஸ், பார்த்தீவ் பட்டேல், போலார்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டம் மூலம் அவ்வணி 187 ரன்களை எடுத்தது. 
இதைத்தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. ஆம் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின் வந்த டூபிளெசி பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் ஹசி ஆட்டமிழக்க, புதுமாப்பிள்ளை ரெய்னா களத்தில் இறங்கினார்.
 
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரெய்னா 25 ரன்களில் ஏமாற்றினார். பின் வந்த தோனியும் தன் பங்கிற்கு ஏமாற்ற சென்னை அணி தடுமாறியது. மறுமுனையில் டூபிளெசியும் 45 ரன்னில் அவுட் ஆனார். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஏமாற்ற இறுதியில் சென்னை அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் மும்மை அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil