Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20இல் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்ப முடியாதது - ஆசிஷ் நெஹ்ரா

டி-20இல் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்ப முடியாதது - ஆசிஷ் நெஹ்ரா
, சனி, 23 மே 2015 (21:14 IST)
டி-20 போட்டிகளில் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்பமுடியாதது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இந்த ஐபிஎல் சீசனில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், பெங்களூருக்கு எதிரான 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
 

 
விருதை பெற்றுக்கொண்டு பேசிய ஆசிஷ் நெஹ்ரா, “நான் இந்த ஐபிஎல் சீசனில் மூன்று அல்லது நான்கு ஆட்ட நாயகன் விருது பெற்றிருக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர், ஒரு தொடர் முழுவதும் அதிக அளவிலான ஆட்ட நாயகன் விருது வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
 
நான் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக பந்து வீசி வருகிறேன். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். ஏனெனில், முதல் ஆட்டத்திற்கு பிறகு நிறைய அழுத்தம் இருந்தது.
 
என்னைப் போன்ற 36 வயதுடைய வீரர்களை மக்கள் கவனித்து வருகிறார்கள். என்னைப் போன்றவர்கள் டி-20 போட்டிகளில் 36 வயதிலும் சிறப்பாக விளையாடுவது நம்பமுடியாதது. ஆனால் கடந்த 10 வருடங்களாக நான் இதே போன்ற சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
 

Share this Story:

Follow Webdunia tamil